Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாட்டிறைச்சிகள் பறிமுதல்

Print PDF

தினமலர் 26.12.2009

மாட்டிறைச்சிகள் பறிமுதல்

போடி நகராட்சி காலனி பகுதியில் சுகாதாரகேடு ஏற்படும் வகையில் திறந்த வெளியில் விற்பனை செய்யப்பட்ட மாட்டிறைச்சிகளை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

போடி நகராட்சி காலனியின் பின்புறப்பகுதியில் பொதுமக்களுக்கு சுகாதார கேடு ஏற்படும் வகையில் திறந்த வெளியில் மாட்டிறைச்சி கடைகள் அமைத்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இப்பகுதியில் சோதனை நடத்திய சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையிலான அலுவலர்கள் மாட்டிறைச்சிகளை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.

நகராட்சி கமிஷனர் சரவணக்குமார் கூறுகையில்; நகராட்சி எல்கைக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு சுகாதாரகேடு ஏற்படும் வகையில் திறந்தவெளியில் ஆடு, மீன்,கோழி போன்ற இறைச்சிகள் விற்பனை செய்பவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். டி : போ