தினமலர் 29.12.2009
சுகாதார வளாகம் திறப்பு
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் நகராட்சி 9வது வார்டில் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாக திறப்பு விழா நடந்தது. பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டில் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. அதில் ஆண்கள், பெண்கள் ஆகியோருக்கு தனித்தனியாக 12 கழிவறை ட்டப்பட்டுள்ளன. அதற்கான திறப்பு விழா நடந்தது. நகராட்சி செயல் அலுவலர் துரைசாமி தலைமை வகித்தார். கவுன்சிலர் பூபதி வரவேற்றார். சேர்மன் குமார் புதிய சுகாதார வளாகத்தை திறந்து வைத்து பேசினார். நகராட்சி துணை சேர்மன் ரவிச்ந்திரன், பி.எஸ்.எல்., ஆலோசனை குழு உறுப்பினர் நடனசபாபதி, கவுன்சிலர்கள் மீன்செல்வன், சுமதி உட்பட பலர் பங்கேற்னர்.