Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாசரேத் பகுதியில் சுகாதார அதிகாரிகள் அதிரடி சோதனை

Print PDF

தினமலர் 31.12.2009

நாசரேத் பகுதியில் சுகாதார அதிகாரிகள் அதிரடி சோதனை

நாசரேத், : நாசரேத் பகுதியில் 30 கடைகளில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.தென்திருப்பேரை உள்ளூர் நல அலுவலர் டாக்டர் மதன் தலைமையில் உணவு ஆய்வாளர் மாரியப்பன் நாசரேத் மற்றும் சுற்றுவட்டாரங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது கடைகளில் கலப்படமான, காலாவதியான மிளகாய் பொடி, வத்தல் பொடி மற்றும் மஞ்சள்தூள் பாக்கெட்டுகளை ஆய்வு செய்தனர். மொத்தம் 30 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 6 கடைகளில் உணவு மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. காலாவதியான பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.கடைகளில் உரிய உரிமம் பெறாமல் கடை நடத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.உரிமம் இல்லாமல் உணவுப் பொருளை விற்பனை செய்தால் 3 மாதம் ஜெயில் தண்டனையும், அபராதம் ரூ.2000/- வழங்கப்படும் என அறிவுறுத்தப்பட்டன. இதில் சுகாதார ஆய்வாளர்கள் பால்ஆபிரகாம், சுப்பிரமணியன், ஹரிஹரசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 31 December 2009 06:54