தினமணி 04.01.2010
குளோரின் மாத்திரைகள் கலந்த குடிநீர் விநியோகம்
அரூர், ஜன. 3: தருமபுரி மாவட்டத்தில் அனைத்துக் கிராமங்களிலும் குளோரின் மாத்திரைகள் (படம்) கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
குடிநீரில் கிரிமிநாசிகள் (பிளிச்சிங் பவுடர்) கலந்து விநியோகம் செய்யப்பட்டது. இவை சில நேரங்களில் குடிநீரில் முழுமையாக கரையாது. இந்நிலையில் சுகாதாரத் துறையின் மூலம் தற்போது குளோரின் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிலோ எடை கொண்ட மாத்திரையின் விலை ரூ.1200.
10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டியில் ஒரு மாத்திரை வீதம் கலந்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.
குடிநீர்த் தொட்டிகளை வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும், நாள்தோறும் குளோரின் மாத்திரைகள் கலந்து பாதுகாக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என ஊராட்சித் தலைவர்கள் மற்றும் மேநீர்த் தேக்கத் தொட்டி பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.