தினமணி 05.01.2010
காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் ரூ. 15 லட்சத்தில் நவீன கழிப்பிடம் திறப்பு
காரைக்குடி,ஜன. 4: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் ரூ. 15 லட்சத்தில் நகராட்சி சார்பில் கட்டி முடிக்கப்பட்ட நவீன கழிப்பிடக் கட்டடம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
நகர்மன்றத் தலைவர் எஸ். முத்துத்துரை புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார். நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன்
பொறியாளர் மணி, உதவிப் பொறியாளர் வேலுச்சாமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.