தினமலர் 06.01.2010
கிள்ளை பேரூராட்சியில் மனநல திருவிழா
பரங்கிப்பேட்டை : கிள்ளையில் சுகாதார துறை சார்பில் மனநல திருவிழா நடந்தது. மாவட்ட மன நலத்திட்டத்தின் சார்பில் நடந்த மனநல திருவிழாவில் பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மன்ற உறுப்பினர்கள் சங் கர், பாண்டியன் முன் னிலை வகித்தனர். மன நல டாக்டர் சத்தியமூர்த்தி வரவேற்றார். மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ஜெயவீரக்குமார் சிறப்புரையாற்றினார். மாவட்ட மருத்துவ கண்காணிப் பாளர் டாக்டர் பரஞ் சோதி, கிள்ளை ஆரம்ப சுகாதார நிலைய டாக் டர்கள் தியாகவதி, அபிநயா பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பொது மக்கள் பலர் பங்கேற்று மனநலம் தொடர்பான சந்தேகங்களுக்கு ஆலோசனை பெற்றனர். மதுரை மனசு நாடக குழுவினரின் மனநல விழிப்பு, போதைக்கு அடிமை ஒழிப்பு போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.ஏற்பாடுகளை பேரூராட்சித் தலைவர் ரவிச்சந் திரன் செய்திருந்தார்.