தினமலர் 07.01.2010
நகராட்சி ஊழியர்களுக்கு கண் பரிசோதனை முகாம்
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சி ஊழியர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது.நெல்லிக்குப்பம் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் அவர் களது குடும்பத்தினருக்கு அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது. சேர்மன் கெய்க்வாட், மேலாளர் சம்பந்தம் முகாமை துவக்கி வைத்தனர். டாக்டர் பாஸ்கர் தலைமையிலான குழுவினர் 73 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் மூன்று பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்