Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவை மாநகராட்சி பகுதிகளில் ஜன.10, பிப்.7-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

Print PDF

தினமணி 07.01.2010

கோவை மாநகராட்சி பகுதிகளில் ஜன.10, பிப்.7-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

கோவை, ஜன.6: கோவை மாநகராட்சி பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜன.10 மற்றும் பிப்.7-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தேசிய போலியோ நோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் கோவை மாநகராட்சி பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜன.10 மற்றும் பிப்.7-ம் தேதிகளில் காலை 7 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

மாநகராட்சி நகர்நல மையங்கள், மருந்தகங்கள், சத்துணவுக்கூடங்கள், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றில் இம் முகாம் நடைபெறுóம். இம் முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். மாநகராட்சி அலுவலகம், பஸ் நிலையங்கள், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்

Last Updated on Thursday, 07 January 2010 10:48