தினகரன் 08.01.2010
போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
நாமக்கல் : நாமக்கல்லில் பவுல்ட்ரி டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் சகாயம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரோட்டரி சங்க தலைவர் கணபதி, நாமக்கல் ஊர்காவல் படை ஏரியா கமாண்டர் சுரேஷ்குமார், திருவள்ளுவன், மணிவண்ணன், கிங் கல்லூரி ரோட்ராக்ட் சங்க மாணவ&மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவர்கள், போலியோ சொட்டு மருந்தின் அவசியம் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய தட்டிகளுடன் ஊர்வலமாக சென்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குமாரபாளையம் நகராட்சி ஏற்பாடு22 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்பள்ளிபாளையம், ஜன.8: குமாரபாளையம் நகராட்சியில் போலியோ சொட்டு மருந்துகள் வழங்க 22 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம் நகராட்சி பகுதியில் வரும் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக 22 மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. காவேரி நகர் பிள்ளையார் கோவில், ஏரித்தெரு விநாயகர் கோவில், சின்னப்பநாய்க்கன் பாளையம் நகராட்சி துவக்கப்பள்ளி, வேதாந்தபுரம் சித்திவிநாயகர் கோவில், சேலம் மெயின் ரோடு நகராட்சி அலுவலகம், கத்தாளைபேட்டை, காட்டூர், திருவள்ளுவர் நகர், காளியண்ண கவுண்டர் லேஅவுட், காவலர்வீதி, நாராயண நகர் ஆகிய சத்துணவு மையங்கள், காந்திபுரம் சூரியநாராயணா திருமண மண்டபம், மேற்கு காலனி அண்ணா திருமண மண்டபம், நாராயண நகர் சத்துணவு மையம், குமாரபாளையம் அரசு மருத்துவமனை, நகராட்சி பேருந்து நிலையம், அம்மன்நகர் மாரியம்மன் கோயில், ராஜராஜன் நகர் மாரியம்மன் கோவில், கொத்துக்காரன் காடு மாரியம்மன் கோயில், நேதாஜிநகர் ரோட்டரி ஹால், பாலிக்காடு விநாயகர்கோயில், ஆனங்கூர் பிரிவில் உள்ள டிரன்சிட் 2 ஆகிய இடங்களில் போலியோ சொட்டு மருந்துகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மையங்களில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பெற்றோர் அழைத்து வந்து போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளும்படி நகராட்சி ஆணையர் மாணிக்கவாசகம் கேட்டுக் கொண்டுள்ளார்.