Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி அமைச்சு பணியாளர் சங்கம் உதயம்

Print PDF

தினமலர் 11.01.2010

மாநகராட்சி அமைச்சு பணியாளர் சங்கம் உதயம்

கோவை : கோவையை தலைமையிடமாகக் கொண்டு, தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சுப் பணியாளர் சங்கம் நேற்று உதயமானது.

இச்சங்க துவக்க விழா, கோவை, தாமஸ்கிளப்பில் நேற்று நடந்தது. கோவை மாநகராட்சி கண்காணிப்பாளர் சுப்ரமணியன் பேசியதாவது: தமிழக மாநகராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பல சங்கங்கள் உள்ளன. மாநகராட்சியில் பணிபுரியும் அமைச்சு பணியாளருக்கும் தனியாக சங்கம் அமைக்கவேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது.

துணைக்கமிஷனர், வார்டு அலுவலகம், பணி அமைப்பு, வருவாய், கணக்கு பிரிவில் பணியாற்றுவோர், உதவிக் கமிஷனர்கள், மன்ற சட்ட அலுவலர், நிர்வாக அலுவலர், கணக்கு அலுவலர், மக்கள் தொடர்பு அலுவலர், கண்காணிப்பாளர், உதவி வருவாய் அலுவலர், மாநகராட்சி சுருக்கெழுத்தர், உதவியாளர், நேர்முக உதவியாளர், கணக்கர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர், சுருக்கெழுத்தர், வரிவசூலர், துப்புரவு கண்காணிப்பாளர் ஆகிய பணிகளை மேற்கொள்வோர் இச்சங்கத்தில் உறுப்பினராக சேரலாம்.

ஓய்வு பெற்ற பின் ஓய்வூதிய பலன்களை எளிதாக பெறவும், ஓய்வூதியர் உரிமைகளை பெறும் வகையிலும் தொடர்ந்து உறுப்பினராக இருக்க அனுமதிக்கப்படுவர். இச்சங்கம், தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் கீழ் செயல்படும்.

அனைத்து மாநகராட்சி பணியாளர்களை, அரசு பணியாளர்களாக்கவும், அரசு பணியாளர்களுக்கு இணையாக மாநகராட்சி பணியாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கவும், அரசு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் கிடைப்பதற்கும் சங்கம் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு, சுப்ரமணியன் பேசினார்.

விழாவில், கோவை மாநகராட்சியிலுள்ள அனைத்து துறையை சார்ந்த பணியாளர்கள் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 11 January 2010 10:36