தினமலர் 11.01.2010
நவீன குளியலறை திறப்பு
மதுரை : மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலம் 27 வது வார்டு, முரட்டன்பத்திரி பகுதியில், நவீன கழிப்பறை மற்றும் குளியலறையை கமிஷனர் எஸ்.செபாஸ்டின் முன்னிலையில், மேயர் தேன்மொழி திறந்து வைத்து பேசியதாவது:ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தில், குடிசை மற்றும் ஓட்டு வீடுகளை கான்கீரிட் வீடுகளாக மாற்றும் திட்டத்தின் கீழ் தற்போது 4000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 15,000 பயனாளிகளுக்கு, கான்கீரிட் வீடு கட்ட உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள நவீன கழிப்பறை, குளியலறைகளை பொது மக்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், என்றார்.மேற்கு மண்டலத் தலைவர் நாகராஜன், தலைமை பொறியாளர் சக்திவேல், உதவிகமிஷனர் பாஸ்கரன், உதவி செயற்பொறியாளர் சாமி கலந்து கொண்டனர்.