Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கும்பகோணம் நகரில் 38 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்

Print PDF

தினமலர் 12.01.2010

கும்பகோணம் நகரில் 38 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்

கும்பகோணம்: கும்பகோணம் நகரில் 38 மையங்களில் 5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட அரையூர் சுப்ரமணிய உடையார் நினைவு மருத்துவமனை வளாகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடக்க விழா நடந்தது.

நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் தமிழழகன் தலைமை வகித்தார். நகர்மன்ற துணைத் தலைவர் தர்மபாலன், ஆணையர் பூங்கொடி அருமைக்கண்ணு, முதுநிலை நகரமைப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார். நகர்மன்ற மூத்த உறுப்பினர் துரை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து கும்பகோணம் நகராட்சிகண்கு உட்பட்ட தொடக்க, நடுலை, உயர்லை, மேல்லைப் பள்ளி கள், மருத்துவ மனைகள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டு, கோவில்கள், தேவ லயம், மசூதிகள், அங்கன் வாடி மையங்கள் ஆகிய இடங்களில் 5 வயதிற்குட் பட்ட குழந்தைகளுக்கு 38 மையங்களில் போலியோ சொட்டு மருந்துகள் வழங்க ப்பட்டது. நகர் முழுவதும் நடமாடும் வாகனம் மூலமும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.இதற்காக பொது சுகாதாரம், நகராட்சி பணியாளர்கள், மருத் துவ பணியாளர்கள், சத்துண வு அமைப்பாளர்கள், ரோட்டரி சங்கத்தினர், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் என நூற்றுக்க ண க்கானோர் சிறப்பாக பணியாற்றினர்.

Last Updated on Tuesday, 12 January 2010 07:32