Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பல்நோக்கு சுகாதார பணியாளர்,சுகாதார பார்வையாளர் பெயர்களை மாற்றி உத்தரவு

Print PDF

தினமலர் 19.01.2010

மாநகராட்சி பல்நோக்கு சுகாதார பணியாளர்,சுகாதார பார்வையாளர் பெயர்களை மாற்றி உத்தரவு

திருநெல்வேலி:மாநகராட்சிகளில் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் மற்றும் மகப்பேறு உதவியாளர்கள், சுகாதார பார்வையாளர் பெயர்களை மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மாநகராட்சிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் பணியாற்றியவர்கள் ஆக்சிலரி உதவி செவிலியர், மகப்பேறு நிலையங்களில் பணியாற்றியவர்கள் மகப்பேறு உதவியாளர், மக்களை நேரடியாக சந்திக்கும் களப் பணியாளர்கள் பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் என அழைக்கப்பட்டனர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொது சுகாதார துறையின் கீழ் இதே பெயர்களில் செயல்பட்டவர்கள் கிராம சுகாதார செவிலியர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டனர்.மாநகராட்சிகளில் பணியாற்றும் ஆக்சிலரி உதவி செவிலியர், மகப்பேறு உதவியாளர்கள், பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் ஆகியோர் தங்களது பெயர்களை நகர சுகாதார செவிலியர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.இது போன்று இவர்களது பணியை மேற்பார்வை செய்து வரும் சுகாதார பார்வையாளர் பெயரை பகுதி சுகாதார செவிலியர் எனவும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.இவர்களின் கோரிக்கையை ஏற்று கொண்டு ஆக்சிலரி உதவி செவிலியர், மகப்பேறு உதவியாளர், பல்நோக்கு சுகாதார பணியாளர் என்ற பெயர்களை நகர சுகாதார செவிலியர் எனவும், சுகாதார மேற்பார்வையாளர் பெயரை பகுதி சுகாதார செவிலியர் எனவும் பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அரசுக்கு பாராட்டு:>இதுகுறித்து தமிழ்நாடு உள்ளாட்சி பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் மற்றும் மகப்பேறு உதவியாளர்கள் சங்க மாநில தலைவர் விஜயலட்சுமி கறும் போது, ""எங்கள் சங்கத்தின் தொடர் வேண்டுகோளை ஏற்று பணியாளர் என்ற பெயர் செவிலியர் என மாற்றம் செய்யப்பட்டது மக்கள் சேவை பணிக்கு கொடுத்த அங்கீகாரமாகும்.

இந்தங உத்தரவை பிறப்பித்த துணை முதல்வர், அரசு செயலாளர் நிரஞ்சன் மார்டி, நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் மற்றும் மாநகராட்சி கூட்டமைப்பின் பொது செயலாளர் சீத்தாராமன் ஆகியோருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கிறோம்' என்றார்.

Last Updated on Tuesday, 19 January 2010 06:45