தினமணி 20.01.2010
துப்புரவுப் பணியாளர்களுக்கு மஞ்சள் காமாலை நோய்த் தடுப்பூசி
புதுச்சேரி, ஜன. 19: உழவர்கரை நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு மஞ்சள் காமாலை நோய்த் தடுப்பூசி செவ்வாய்க்கிழமை போடப்பட்டது.
÷இந்நகராட்சியில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் உள்ளிட்ட 500 பேருக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிக்காமல் இருக்க தடுப்பூசி போடப்பட்டது.÷
இப் பணியை உழவர்கரை நகர்மன்றத் தலைவர் என்.எஸ்.ஜெ. ஜெயபால், நகர் நல அலுவலர் தியாகராஜன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். மாதம் 1 டோஸ் வீதம் 3 மாதங்களுக்கு இந்த ஊசி போடப்படும். இதன்படி, இதன் அடுத்த கட்டமாக பிப்ரவரி 18-ம் தேதியும் அதைத் தொடர்ந்து மார்ச் 17-ம் தேதியும் தடுப்பூசி போடப்படும்.