தினமலர் 20.01.2010
கலப்பட எண்ணெய் குறித்து அதிகாரிகள் ஆய்வு
சாத்தான்குளம் : சாத்தான்குளத்தில் சுகாதாரத் துறையினர், கடைகளில் கலப்பட எண்ணெய் சோதனை செய்தனர்.சாத்தான்குளம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயகணேஷ் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்கள் மந்திரராஜன், ரெஜினால்ட், கிறிஸ்டோபர் செல்வதாஸ் ஆகியோர் சாத்தான்குளத்தில் பல கடைகளில் கலப்பட எண்ணெய் சோதனை செய்தனர்.இதில் எண்ணெய் மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. எண்ணெயில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் எச்சரித்தனர்.