தினமலர் 21.01.2010
சமையல் எண்ணெய் தரம் சுகாதாரத்துறை திடீர் ஆய்வு
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பகுதியில் உணவுக்கு பயன்படுத்தும் எண்ணெய் தரம் குறித்து சுகாதார துறையினர் திடீர் ஆய்வு செய்தனர். அரசு பொது சுகாதாரத்துறை இயக்குனர் இளங்கோ உத்திரவில் மாநிலம் முழுவதும் உணவு பொருள் தரம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, மலைக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களில் மளிகை கடைகளில் உள்ள சமையல் எண்ணெய், மொத்த விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மலைகோவிலூர் வட்டார அரசு டாக்டர் சாந்தி, ஈசநத்தம் அரசு டாக்டர் கௌதமன் ஆகியோரின் மேற்பார்வையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கவேல், சுகதாதார ஆய்வாளர்கள் கருப்புசாமி, டைட்டஸ் சிவலிங்கம், ராமசந்திரன், ஆகியோர் கொண்ட குழுவினர் உணவுக்கு பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணை ஆகியவை குறித்து ஆய்வு செய்து, சோதனைக்கு மாதிரி சேகரித்தனர்.
தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, பேட்ஜ் இல்லாத சுமார் மூவாயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள எண்ணெய் வகை றிமுதல் செய்யப்பட்டது. விற்பனை உரிமம் இல்லாத கடைகளில் உடனடியாக உரிமம் பெற எச்சரிக்கை செய்யப்பட்டது.