Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியின்றி விற்கப்பட்ட பன்றி இறைச்சிகள் பறிமுதல்

Print PDF

தினமலர் 25.01.2010

அனுமதியின்றி விற்கப்பட்ட பன்றி இறைச்சிகள் பறிமுதல்

தஞ்சாவூர்: தஞ்சை நகரப் பகுதிகளில் அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்ட பன்றி இறைச்சிகளை நகராட்சி சுகாதார அலுவலர்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.தஞ்சை நகரப் பகுதிகளில் அனுமதியின்றி பொதுசுகாதார சட்டத்துக்கு புறம்பாகவும், பொதுமக்களுக்கும், சுற்றுப்புறத்துக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் பன்றி இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சிக்கு புகார் வந்தது. இதையடுத்து நகர் நல அலுவலர் அர்ஜூன்குமார் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் நகரில் திடீர் ஆய்வு நடத்தி 30 கிலோ எடைஉள்ள பன்றி இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். நகராட்சியின் அனுமதியின்றி சுகாதாரமற்ற இறைச்சி விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர் நல அலுவலர் அர்ஜூன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார

Last Updated on Monday, 25 January 2010 06:33