Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெசன்ட்நகர் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி

Print PDF

தினகரன் 27.01.2010

பெசன்ட்நகர் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி

வேளச்சேரி : ‘கடற்கரையை மீட்டெடுப்போம்இளைஞர் இயக்கம் சார்பில் பெசன்ட்நகர் ஊரூர்குப்பம், ஆள்காட் குப்பம் கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தன்னார்வ இயக்க இளைஞர்கள் சேகரித்த குப்பைகளை நீல் மெட்டல் பனால்கா ஊழியர்கள் வந்து லாரிகளில் எடுத்துச் சென்றனர். சுமார் ஒன்றரை கி.மீ. தூரம் சுத்தம் செய்யும் பணி நடந்தது. இதில் 300 பேர் பங்கேற்றனர். கல்லூரி, பள்ளி மாணவ& மாணவிகளுடன் பொதுமக்களும் இணைந்து குப்பை சேகரித்தனர்.

பின்னர் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோயில் அருகில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அப்போது அந்த பகுதி மக்களிடம் திடக்கழிவு குப்பைகளை கடலில் போடாதீர்கள், கழிவுநீர் கடலில் கலக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினர்.

Last Updated on Wednesday, 27 January 2010 11:31