Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதாரமற்ற தண்ணீர் விற்றால் நடவடிக்கை

Print PDF

தினகரன் 27.01.2010

சுகாதாரமற்ற தண்ணீர் விற்றால் நடவடிக்கை

சென்னை : சென்னை அரசு பொது மருத்துவமனையில் உள்ள குடல் இரைப்பை அறுவை சிகிச்சை துறை சார்பில், ‘உணவு பழக்க வழக்கங்களும் ஜீரண மண்டல உபாதைகளும்என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி அரசு மருத்துவ கல்லூரியில் நேற்று நடந்தது. குடல் இரைப்பை அறுவை சிகிச்சை தலைவர் டாக்டர் சந்திரமோகன் தலைமை வகித்தார்.

இதில்அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘‘அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.1,232 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. புதிய கட்டிடங்கள் கட்டப்படும். நவீன மருத்துவ கருவிகள் வாங்கப்படும்ÕÕ என்றார்.

சுகாதாரத் துறை செயலர் சுப்புராஜ் பேசுகையில், ‘‘தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் போலி ஐஎஸ்ஐ முத்திரையை போட்டு தரமற்ற தண்ணீர் விற்கின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.

Last Updated on Wednesday, 27 January 2010 11:34