Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சாலாமேடு, வழுதரெட்டியிலும் பாதாள சாக்கடைத் திட்டம் : சேர்மன் ஜனகராஜ் தகவல்

Print PDF

தினமலர் 01.02.2010

சாலாமேடு, வழுதரெட்டியிலும் பாதாள சாக்கடைத் திட்டம் : சேர்மன் ஜனகராஜ் தகவல்

விழுப்புரம் : விழுப்புரம் நகர் மன்றக் கூட்டம் சேர்மன் ஜனகராஜ் தலைமையில் நடந் தது. மேலாளர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர். விழுப்புரத்தில் திடக்கழிவு மேலாண்மை திட் டத்தில் 36 வார்டிலும் மகளிர் சுய குழுவைச் சேர்ந்த 72 பேர் மூலம் குப்பைகள் அகற்றப்படுகிறது. இதனை வரும் மார்ச் மாதம் வரை நீடிக்கவும், இதேபோல் கோலியனூரான் வாய்க் கால் தூய்மை செய்து வரும் 10 பேர் தொடர்ந்து மார்ச் வரை பணியாற்ற தீர்மானம் முன் வைக்கப் பட்டது.

கோலியனூரான் வாய்க்கால் மாதம் ஒருமுறை கூட சுத்தப்படுத்துவதில்லை என கவுன்சிலர் அலாவுதீன் புகார் கூறினார். தினசரி சீரமைக்கப் பட உள்ளதாக சேர்மன் பதிலளித்தார். நகராட்சி பூங்கா அருகேயும், அய்யனார்குளம் பகுதியிலும் திறந்தவெளியில் சிறு நீர், மலம் கழித்தல் தொடர்கிறது. தினமலரில் செய்தி வந் துள்ளது. அங்கு கழிப்பிட வசதி செய்ய வேண்டும் என ரகுபதி வலியுறுத்தினார்.

பாதாள சாக்கடை பள்ளம் எடுத்ததில் ரகீம் லேஅவுட், மாந்தோப்பு வீதி, கே.கே.ராடு, ரங்கநாத ரோடு பகுதிகளில் பெரிய பள்ளங்களை தற் காலிகமாக மூட வேண் டும் என பஞ்சநாதன் கோரினார். கீழ்பெரும்பாக்கம் சுடுகாடு பகுதியில் கழிவு நீர் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு நிலவுவதை தடுக்க வேண்டும் என மகாலட்சுமி வலியுறுத்தினார். ரயில்வே மேம்பாலம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என வினோத் கூறினார்.

நகராட்சி பிரசவ மருத்துவமனையில் தரையில் குழந்தை கிடத்தப்படுகிறது. அங்கு டேபிள் வழங்க வேண்டும். கொசுத் தொல்லையை போக்க வீடு தோறும் செப் டிக் டேங்க் வலைகள் வழங்க வேண்டும் என துணை சேர்மன் பார்த்திபன் கூறினார். குடிநீர் திட்டம் கிடப் பில் கிடக்கிறது என கவுன் சிலர் கணேஷ் சக்திவேல் புகார் கூறினார். நகராட்சி முழுவதும் நாய்கள் தொல்லை அதிகரித்துள் ளது என கவுன்சிலர்கள் புகார் கூறினர்.

சேர்மன் ஜனகராஜ் பதிலளித்து பேசியதாவது: ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு நகராட்சி பகுதியில் கழிப்பிட வசதிகள் செய்து தரப்படும். அனைத்து பகுதியிலும் சி.எப்.எல்., பல்புகள் பொறுத்தப்படும். வீடுதோறும் நகராட்சி சார்பில் கொசு வலை வழங்கப்படும். மற்ற நகராட்சிகளை விட சிறப்பாக நடக்கிறது. ஒன்றிரண்டு குறைகள் இருப்பதும் அடுத்த கூட் டத்திற்குள் சரி செய்யப்படும். குடிநீர் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சாலாமேடு, வழுதரெட்டியிலும் ஊராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டம் துவக்கப்பட்டு இணைக் கப்பட உள்ளது என்றார்.

Last Updated on Monday, 01 February 2010 06:37