Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பன்றி வளர்ப்பவர்களுக்கு கடலூர் நகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினகரன் 03.02.2010

பன்றி வளர்ப்பவர்களுக்கு கடலூர் நகராட்சி எச்சரிக்கை

கடலூர் : சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் பன்றிகளை அவற்றை வளர்ப்பவர்கள் அப்புறப்படுத்தாவிட்டால் நாளை முதல் நகராட்சி மூலம் பன்றிகள் பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படும் என்று நகராட்சி ஆணையர் குமார் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளசெய்திகுறிப்பு;

கடலூர் நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை அதன் உரிமையாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நகராட்சியால் பிடித்து அப்புறப்படுத்தப்படும். மீறி பொது சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கும் பன்றி உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பலமுறை இவ்வாறு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் பல இடங்களில் பன்றிகள் சுற்றி திரிந்து சுகாதார கேட்டினை ஏற்படுத்துகின்றன. பன்றிகளை பன்றி வளர்ப்பவர்களே அப்புறப்படுத்த வேண்டும். தவறினால் பொது சுகாதார நலன் கருதி கொள்ளை நோய் பரவாமல் தடுக்கும் பொருட்டு நகராட்சி வாயிலாக நாளை முதல் கடலூர் நகராட்சி மூலம் பன்றிகள் பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Wednesday, 03 February 2010 11:08