Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமலர் 04.02.2010

கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சமயபுரம்: கொள்ளிடம் டோல்கேட்டில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட தீவிர கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.டோல்கேட் ஒய்.டபிள்யு.சி.ஏ பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியை சென்னை தலைமை பூச்சியியல் வல்லுநர் ஸ்ரீதரன் தொடங்கி வைத்தார். திருச்சி முதுநிலை பூச்சியியல் வல்லுநர் பாலாஜி, மாவட்ட மலேரியா அலுவலர் சாந்தி, வட்டார மருத்துவ அலுவலர் பிரபா, ஒய்.டபிள்யு.சி.ஏ மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியை சுமதி வாலண்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி டோல்கேட் பகுதியின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது. பேரணியில் மாணவ, மாணவிகள் கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டவாறு சென்றனர். ஏற்பாடுகளை வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர்கள் ரவீந்திரன், சாமுவேல் மனோகரன், கிராம சுகாதார செவிலியர் சுஜாதா ஆகியோர் செய் திருந் தனர்.

Last Updated on Thursday, 04 February 2010 06:10