Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தி.நகர் சாலையோர உணவகங்கள் மாநகராட்சி சுகாதாரத்துறை அகற்றம்

Print PDF

தினமலர் 04.02.2010

தி.நகர் சாலையோர உணவகங்கள் மாநகராட்சி சுகாதாரத்துறை அகற்றம்

தி.நகர் : தி.நகரில் சாலையோர பகுதிகள், பிளாட்பாரங் களை ஆக்கிரமித்து வைக்கப் பட்டிருந்த 10க்கும் மேற் பட்ட தள்ளுவண்டி உணவகங்களை, மாநகராட்சி சுகாதாரத்துறையினர் நேற்று மாலை அகற்றினர்.

தி.நகர் சென்னையின் முக்கிய வணிக பகுதியாக விளங்கி வருகிறது. இதனால், சாலையோரங் களும், பிளாட்பாரங்களும் வணிக ரீதியாக மற்ற இடங்களை விட அதிகளவில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. அதே போல் இங்கு ஏராளமான சுகாதாரமற்ற முறையிலான உணவகங்கள் இங்கு அதிகம் செயல்பட்டு வருகின்றன.

ஆக்கிரமிப்புகள் குறித்தும் சுகாதாரமற்ற முறையில் செயல்படும் உணவகங் கள் குறித்தும் பல முறை புகார் அளித்தும் எவ்வித பயனுமில்லை. இந்நிலையில், தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்த உணவகங்களை மாநகராட்சி அதிரடியாக மூடியது. இதன் தொடர்ச்சியாக, நேற்று தி.நகர் சாலையோர உணவகங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி சுகாதார ஊழியர்கள், நேற்று மாலை அதிரடியாக ஈடுபட்டனர். இதில், நடேசன் பூங்கா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்த 10க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி, சாலையோர உணவகங்கள் அகற்றப்பட்டன.

Last Updated on Thursday, 04 February 2010 06:35