தினகரன் 04.02.2010
கொசு ஒழிப்பு முகாம்
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஆண்டிமடம் வட்டாரத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல் களை பரப்பும் கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைக்கான முகாம் ஆண்டிமடத்தில் நடைபெற்றது. வட்டார மரு த்துவ அலுவலர் செல்வமணி தலைமை வகித்தார். ஊரா ட்சி தலைவர்கள் ஆண்டிமடம் சாந்திசெல்வகுமார், விளந்தை சுசீலா மதியழகன் முன்னி லை வகித்தனர். சுகாதார மேற்பார்வையாளர் சீமான், அன்பழகன் கொசு ஒழிப்பு பற்றி விளக்கமளித்தனர். தன்னார்வ தொண்டர்கள், சுகாதார ப ணியாளர்கள் கலந்து கொ ண்டு கொசு இல்லாத கிரா மமாக உருவாக்குவோம் என உறுதி மொழி ஏற்றனர். அனைத்து கிராமங்களிலும் கொசு மருந்தும், புகை மருந் தும் தெளிக்கப்பட்டது.