Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகர சுகாதார மேம்பாட்டு பணிகள் ம.பி., குழு பார்வை

Print PDF

தினமலர் 05.02.2010

மாநகர சுகாதார மேம்பாட்டு பணிகள் ம.பி., குழு பார்வை

திருச்சி: திருச்சி மாநகராட்சி பகுதியில் நடந்து வரும் சுகாதார மேம்பாட்டுப் பணிகளை மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகப் பிரதிநிதிகளுடன், மத்திய பிரதேச மாநில உயர்மட்டக் குழு நேரில் பார்வையிட்டனர். திருச்சி மாநகராட்சியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மற்றும் மேம்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் பற்றி மத்திய பிரதேச மாநில உயர்மட்டக் குழுவினருக்கு கம்ப்யூட்டர் விளக்கப்படம் மூலம் மேயர் சுஜாதா, கமிஷனர் பால்சாமி எடுத்துரைத்தனர்.

மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை, நவீன இறைச்சிக்கூடம், நவீன எரிவாயு தகனமேடை, பாதாள சாக்கடை திட்டம், சாலை மற்றும் வடிகால் மேம்பாட்டுப் பணிகள், குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள், வரி மற்றும் வரியில்லா வசூல் பணி குறித்து கம்ப்யூட்டர் மூலம் எடுத்துரைக்கப்பட்டது. விறகுப்பேட்டையில் நடக்கும் ஒருங்கிணைந்த சுகாதார வளாக பராமரிப்பு, செயல்பாடுகள் குறித்து உயர்மட்டக் குழுவினர் நேரில் அழைத்து செல்லப்பட்டு காண்பிக்கப்பட்டனர். நகரப் பொறியாளர் ராஜாமுகமது, நிர்வாகப் பொறியாளர்கள் சந்திரன், அருணாச்சலம், மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சக துணை இயக்குனர் தீனதயாளன், திட்ட அலுவலர் கமல்சந்திரநாகர் உட்பட பலர் பங்கேற்றனர

Last Updated on Friday, 05 February 2010 06:55