Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஈரோடு மாநகராட்சியில் 7-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

Print PDF

தினமணி 05.02.2010

ஈரோடு மாநகராட்சியில் 7-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

ஈரோடு, பிப்.4: ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் வரும் 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன.

மாநகராட்சி மகப்பேறு நிலையங்கள், நகர்நல மையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு, ஊட்டச்சத்து மையங்கள், சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள், பஸ், ரயில் நிலையங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாம்களில், 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டுமருந்து இலவசமாக வழங்கப்படும்.

ஏற்கெனவே குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டிருந்தாலும், இந்த முகாமிலும் சொட்டு மருந்து வழங்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.சுடலைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.