Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

'போலியோ'வை விரட்டி விட முடியும்: கலெக்டர் நம்பிக்கை

Print PDF

தினமலர் 08.02.2010

'போலியோ'வை விரட்டி விட முடியும்: கலெக்டர் நம்பிக்கை

தர்மபுரி: ""ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கினால், இளம்பிள்ளைவாத நோயை முற்றிலும் விரட்டலாம், '' என கலெக்டர் அமுதா தெரிவித்தார். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி முதற்கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. அதில, ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 518 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக நேற்று மாவட்டம் முழுவதும் 903 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தர்மபுரி நகராட்சி பஸ்ஸ்டாண்ட், புறநகர் பஸ்ஸ்டாண்ட் மற்றும் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் அமுதா துவக்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கிறது. ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கினால், இளம்பிள்ளை வாத நோயை சமுகத்தை விட்டு நிச்சயம் விரட்டலாம்.பெற்றோர், ஒவ்வொரு போலியோ சொட்டு முகாமிலும் தங்களுடைய குழந்தைகளுக்கும் கட்டாயம் வழங்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் ஊனம் அடைவதில் இருந்து பாதுகாக்கப்படுகின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.பஸ் ஸ்டாண்டில் கலெக்டர் அமுதா பஸ்களில் ஏறி, அதில் பயணம் செய்த குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு யூனியனுக்கும் இரு விளம்பர வாகனம் என்ற வீதத்தில் மொத்தம் 16 போலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு வாகனங்களை கலெக்டர் அமுதா துவக்கி வைத்தார்.நகராட்சி தலைவர் ஆனந்தகுமார்ராஜா, மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவர் சுந்தரவதனம், துணை இயக்குனர் அண்ணாமலை, நகராட்சி கமிஷ்னர் அண்ணாதுரை, ரோட்டரி பழனிச்சாமி, மருத்துவர்கள் அனிதா, தாமரைச்செல்வி, புகழேந்திராஜா, பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தர்மபுரி நூலஅள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் அமுதா துவக்கி வைத்தார். அப்போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு அடைந்த பெண்ணுக்கு அவர் ஜனனி சுரக்சனா யோசனா திட்டத்தின் கீழ் 700 ரூபாய் வழங்கினார்.ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 22 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டுமான பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு, கலெக்டர் அமுதா உத்தரவிட்டார். சுகாதார துறை துணை இயக்குனர் அய்யனார், உதவி இயக்குனர் அண்ணாமலை, மருத்துவர் மகாலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

* தர்மபுரி குமாரசாமி பேட்டை திருவள்ளுவர் அரசு துவக்கப்பள்ளியில் நடந்த போலியோ சொட்டு முகாமில் நகர தி.மு.க., செயலாளர் முருகேசன் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். நகர பொறுப்பு குழு உறுப்பினர் குமரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 08 February 2010 05:53