Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

3.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து

Print PDF

தினமணி 08.02.2010

3.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து

விழுப்புரம், பிப்.7: விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 2-ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து புகட்டும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

÷விழுப்புரத்தில் நகராட்சி பிரசவ விடுதி வளாகத்தில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டி மாவட்ட ஆட்சியர் ஆர். பழனிச்சாமி தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட 3.50 லட்சம் குழந்தைகளுக்கு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டுமருந்து புகட்டப்பட்டது.

÷இதற்கான சொட்டு மருந்துகள் மாவட்டத்திலுள்ள 86 ஆரம்ப சுகாதார மையங்களுக்கு அனுப்பப்பட்டு 2,375 மையங்களில் குழந்தைகளுக்கு புகட்டப்பட்டது.

÷தொடக்க விழாவில் விழுப்புரம் நகர்மன்றத் தலைவர் ஆர். ஜனகராஜ், ஆணையர் சிவகுமார், ஓவர்சீயர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

÷கணக்கெடுப்பின்படி விடுபட்ட குழந்தைகளுக்கு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் வீடு வீடாகச் சென்று அலுவலர்கள் போலியோ சொட்டு மருந்தினை வழங்கவுள்ளனர்.

Last Updated on Monday, 08 February 2010 09:36