Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

Print PDF

தினமணி 08.02.2010

திருச்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

திருச்சி
, பிப். 7: திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம்களில் ஏறத்தாழ 2 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டது.
இரண்டாவது கட்டமாக நடைபெற்ற இந்த முகாமுக்காக மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 1270 மையங்களும், மாநகராட்சியில் 216 மையங்களும், துறையூர் நகராட்சியில் 9 மையங்களும், மணப்பாறையில் 24 மையங்களும் என மொத்தம் 1519 மையங்கள் அமைக்கப்பட்டன.

மாவட்ட, மாநகராட்சி அலுவலர்களுடன், தன்னார்வத் தொண்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்த முகாமில் பங்கேற்று பணியாற்றினர். மாவட்டம் முழுவதும் 2.56 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஏறத்தாழ 2 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டப்பட்டதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. விடுபட்ட குழந்தைகளுக்காக தொடர்ந்து திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் வீடு வீடாகச் சென்று சொட்டு மருந்து புகட்டப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Last Updated on Monday, 08 February 2010 09:59