Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

போலியோ சொட்டு மருந்து முகாம்

Print PDF

தினமலர் 09.02.2010

போலியோ சொட்டு மருந்து முகாம்

செய்யாறு: செய்யாறு நகராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. நகராட்சி: செய்யாறு நகராட்சியில் நடந்த முகாமை சேர்மன் சம்பத் தொடங்கி வைத்தார். மருத்துவ அதிகாரி பிரதாப், துப்புரவு அலுவலர் பாஸ்கர், துப்புரவு ஆய்வாளர் மதனராஜன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். 3 மொபைல் "பூத்' உள்ளிட்ட 17 மையங்களில் ஆயிரத்து 509 பெண் குழந்தைகள் உள் ளிட்ட 3 ஆயிரத்து 290 குழந் தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

அரசு மருத்துவமனை: செய்யாறு அரசு மருத்துவமனையில் முதன்மை மருத்துவ அதிகாரி சவுந்திரராஜன் இம்முகாமை தொடங்கி வைத்தார். குழந்தைகள் நல மருத்துவர்கள் சுகன்யா மற்றும் ராஜா ஆகியோர் குழந்தைகளை பரிசோதித்து 428 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினர்.

நாட்டேரி: நாட்டேரி ஆர ம்ப சுகாதார நிலையத்தில் பஞ்., தலைவர் பழனி இம்முகாமை தொடங்கினார். மருத் துவ அதிகாரி ராஜேஷ், சக்கரவர்த்தி, பிரசன்னா, சுகாதார ஆய்வாளர் சம்பத் ஆகியோர் பங்கேற்றனர். முகாமில் ஆயிரத்து 938 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப் பட்டது.

Last Updated on Tuesday, 09 February 2010 10:13