Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சியில் சொட்டு மருந்து முகாம்

Print PDF

தினமலர் 09.02.2010

நகராட்சியில் சொட்டு மருந்து முகாம்

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் துவக்கியது. முன்னாள் நகர்ராட்சி தலைவர் சீனி இளங்கோ, சுகாதார அலுவலர் பாலசுப்ரமணியன், மனோரா ரோட்டரி சங்க தலைவர் சின்னகண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனோரா ரோட்டரி சங்க நிர்வாகிகள் செயலாளர் பூவலிங்கம், ரவி, முகமது அலிஜின்னா, அண்ணாத்துரை, கண்ணதாசன், சம்பத், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மேலாளர் ராமமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், நடராஜன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.

Last Updated on Tuesday, 09 February 2010 10:19