தினமலர் 11.02.2010
நவீன பொது கழிப்பிடம் அமைச்சர் நேரு திறப்பு
திருச்சி: திருச்சி மாநகர் வாமடம் பகுதியில் 10 லட்சம் ரூபாய் செலவில் மாநகராட்சி நிதியிலிருந்து ஆண், பெண்ணு க்கு தனித்தனியாக நவீன பொது கழிப்பிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர் நேரு நவீன பொது கழிப்பிடத்தை திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் மாநகர மேயர் சுஜாதா, துணைமேயர் அன்பழகன், டி.ஆர்.ஓ., தட்சிணாமூர்த்தி, சிட்டி இன்ஜினியர் ராஜா, கோட்டத்தலைவர் அறிவுடை நம்பி, கவுன்சிலர்கள் அப்துல்லா, கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர.