தினமணி 11.02.2010
ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட நவீன பொதுக் கழிப்பறை திறப்பு
திருச்சி, பிப். 10: திருச்சி மாநகரம், வாமடம் பகுதியில் கட்டப்பட்ட நவீன பொதுக் கழிப்பறையை மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு புதன்கிழமை திறந்துவைத்தார்.
மாநகராட்சியின் பொது நிதியிலிருந்து ரூ. 10 லட்சத்தில் இந்தக் கழிப்பறை கட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் எஸ். சுஜாதா, துணை மேயர் மு. அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வி. தட்சிணாமூர்த்தி, நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, செயற்பொறியாளர் ஆர். சந்திரன், கோட்டத் தலைவர் ரெ. அறிவுடைநம்பி, உதவி ஆணையர் வி. நடராஜன், மாமன்ற உறுப்பினர்கள் மு. அப்துல்லா, சி. கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.