தினமலர் 19.02.2010
லப்பைக்குடிக்காடு பாதாள சாக்கடை: கலெக்டர் ஆய்வு
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு டவுன் பஞ்சாயத்தில் 137.50 லட்சம் ரூபாய் மதிப்பில் அமையவுள்ள பாதாள சாக்கடை திட்டத்திற்கான இடத்தினை கலெக்டர் விஜயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். லப்பைக்குடிக்காடு டவுன் பஞ்சாயத்தில் ஜமாத்தார்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் விஜயகுமார் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ள இடங்களை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் விஜயகுமார் அடுத்த வாரத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு இத்திட்டம் விரைவில் தொடங்குவதற்கு ஆவண செய்யப்படும் என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில், ஆர்.டி.ஓ., பாலுசாமி, குன்னம் தாசில்தார் தங்கராஜ், டவுன் பஞ்சாயத்து தலைவர் நூர்ஜகான் உட்பட பலர் பங்கேற்றனர்.