Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஓட்டலில் சுகாதாரக் கேடு: அதிகாரிகள் திடீர் சோதனை; அபராதம் விதிப்பு

Print PDF

தினமலர் 19.02.2010

ஓட்டலில் சுகாதாரக் கேடு: அதிகாரிகள் திடீர் சோதனை; அபராதம் விதிப்பு

திருநெல்வேலி:புதிய பஸ்ஸ்டாண்டில் சுகாதாரக் கேடாக இருந்த ஓட்டலில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி அபராதம் விதித்தனர்.நெல்லை புதுபஸ்ஸ்டாண்டு உணவகத்தில் உணவு தயாரிக்கும் இடம் மிகவும் சுகாதாரக் கேடாக இருப்பதாக மாநகராட்சி கமிஷனருக்கு புகார் வந்தது. மேலப்பாளையம் உதவிக்கமிஷனர் (பொறுப்பு) பாஸ்கர் தலைமையில் உதவி வருவாய் அலுவலர் சோமசுந்தரம், உணவு ஆய்வாளர் ஏ.ஆர்.சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர் முருகேசன் சம்பந்தப்பட்ட கடையில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சுகாதாரக் கேடாக உணவு தயாரிக்கும் இடம் இருந்ததால் அந்த கடையில் உணவு தயாரிப்பதை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டனர். ரூ.250 அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த இடத்தில் உணவு தயாரிக்க மாட்டேன் என உறுதிமொழி பெறப்பட்டது.

Last Updated on Friday, 19 February 2010 07:51