தினமலர் 22.02.2010
நகர தூய்மையை வலியுறுத்தி மாணவர்கள் ஸ்கேட்டிங் பயணம்
பண்ருட்டி : பண்ருட்டி ஜான்டூயி பள்ளி சார்பில் நகரை தூய்மையாக மாற்ற வலியுறுத்தி ஸ்கேட்டிங் பயணம் நேற்று நடந்தது.
பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிதம்பரம், கடலூர் ரோலர் ஸ்கேட்டிங் கழகம் சார்பில் நகரை துய்மையாக மாற்றுவதற்கு வலியுறுத்தி பண்ருட்டி ஒன்றிய அலுவலகம் முன் ஸ்கேட் டிங் பயண துவக்க விழா நடந்தது. இதில் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் டிஸ்வாஸ் தலைமையில் 11 மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை நகராட்சி சேர்மன் பச்சையப் பன் துவக்கி வைத்தார். நான்குமுனை சந்திப்பில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தணிகாசலம் முடித்து வைத்தார். இதில் வக்கீல் வடிவேலன், ஜான்டூயி பள்ளி தாளாளர் வீரதாஸ், முதல்வர் வாலண்டினா லெஸ்லி, சிவிக் எக்ஸ் னோரா தலைவர் பசுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.