Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நெல்லை தேயிலை விற்பனை கடைகளில்மாநகராட்சி அதிகாரிகள் சோதனை

Print PDF

தினமலர் 23.02.2010

நெல்லை தேயிலை விற்பனை கடைகளில்மாநகராட்சி அதிகாரிகள் சோதனை

திருநெல்வேலி:நெல்லையில் தேயிலை விற்பனை கடைகள், குடோன்களில் மாநகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.தமிழகம் முழுவதும் கலப்படம் செய்யப்பட்ட தேயிலை விற்கப்படுவதாக "தினமலரில்' செய்தி வெளியானது. இதையடுத்து சென்னை பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ, உணவு கலப்பட தடைச்சட்ட இணை இயக்குனர் டாக்டர் கண்ணன் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் தேயிலை விற்பனை நிலையங்கள், மொத்த தேயிலை விற்பனை குடோன்களில் நேற்று ஒரே நாளில் சோதனை நடத்தப்பட்டது. நெல்லையில் மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் உத்தரவுப்படி சுகாதார அதிகாரி கலு.சிவலிங்கம் தலைமையில் உணவு ஆய்வாளர்கள் ஏ.ஆர்.சங்கரலிங்கம், காளிமுத்து, சுகாதார ஆய்வாளர் அரசகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் நெல்லை ஜங்ஷன், டவுன் பகுதிகளில் தேயிலை விற்பனை கடைகள், குடோன்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த தேயிலை உதிரிகள், தேயிலை பாக்கெட்டுகளை உணவு மாதிரியாக எடுத்து பகுப்பாய்விற்கு அனுப்பினர். தேயிலையில் கலப்படம் செய்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.

மாவட்டம் முழுவதும் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மீரான் மைதீன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள தேயிலை விற்பனை மையங்களில் திடீர் சோதனை நடத்தி, தேயிலைகளை உணவு மாதிரியாக எடுத்து சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பினர்