Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கலப்பட டீ தூள் உபயோகம்?53 டீக்கடைகளில் சோதனை

Print PDF

தினமலர் 23.02.2010

கலப்பட டீ தூள் உபயோகம்?53 டீக்கடைகளில் சோதனை

திருவண்ணாமலை:திருவண்ணாமலை பகுதியில் கலப்பட டீ தூள் பயன் படுத்தப்படுகிறதா என்பது குறித்து 53 டீக்கடைகளில் சுகாதாரத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.திருவண்ணாமலை நகரில் துணை சுகாதார இயக்குனர் சித்ரா மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று டீ கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் டீ கடைகளில் பயன்படுத்தப்படும் டீ தூள்கள் தரமானதா, கலப்பட டீ தூள் பயன்படுத்தப்படுகிறதா என்று சோதனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, திருவண் ணாமலையை சுற்றியுள்ள பல கிராமங்களிலும் இதேபோல் சோதனை மேற் கொள்ளப்பட்டன.மொத்தம் 53 டீக்கடைகளில் டீ தூள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவற்றை பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Last Updated on Tuesday, 23 February 2010 06:58