Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கலப்படம்: சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனை

Print PDF

தினமணி 24.02.2010

கலப்படம்: சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனை

காஞ்சிபுரம், பிப். 23: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உணவில் கலப்பட பொருள்கள் இருக்கிறதா என்பது குறித்து சுகாதாரத் துறையினர் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.

÷சுகாதாரத்துறை துணை இயக்குநர் ராஜசேகரன் தலைமையில் காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதிகளில் அவர்கள் திடீர் ஆய்வு செய்தனர். ÷

இரு தேயிலை பொருள்களின் கிடங்குகள், 8 மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள், மற்றும் 15 தேநீர் கடைகள் ஆகிய இடங்களில் இவர்கள் ஆய்வு நடத்தினர்.

÷தேயிலை தயாரிப்பு, தொழிற்சாலை விவரம், தயார் செய்யப்பட்ட நாள் மற்றும் காலாவதியாகும் நாள் முதலியவை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்றும் ஆய்வில் கண்காணிக்கப்பட்டன.

÷
காலாவதியான பொருள்கள் கைப்பற்றப்பட்டு நகர் நல அலுவலர் பரணிகுமாரின் முன்னாள் தீயில் அழிக்கப்பட்டன.

÷சந்தேகப்படும்படியாக இருப்புப் பொருள்கள் மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்காக தஞ்சாவூர் உணவு பகுப்பாய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. இந்த திடீர் ஆய்வில் உணவு ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Wednesday, 24 February 2010 10:20