தினமணி 24.02.2010
கடையநல்லூரில் கொசுக்களை கட்டுப்படுத்த கழிப்பறை குழாய்களில் வலை கட்டும் பணி
கடையநல்லூர், பிப். 23: கடையநல்லூரில் பரவிய காய்ச்சலை தொடர்ந்து கொசுக்களைக் கட்டுப்படுத்த கழிப்பறைகளின் குழாய்களில் வலை கட்டும் பணி நடைபெறுகிறது.
இது தொடர்பாக நகராட்சி ஆணையர் அப்துல் லத்தீப் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடையநல்லூர் பகுதியில் 2 மாதங்களாக பரவி வந்த காய்ச்சல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் வீடுகள்தோறும் அபேட் மருந்து ஊற்றும் பணியும், முதிர் கொசுக்களைக் கட்டுப்படுத்த புகை மருந்து அடிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
மேலும், 18,000 வலைகள் வாங்கப்பட்டு நகரிலுள்ள கழிப்பறைக் குழாய்கள், மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டிகளின் குழாய்களை மூடும் பணி சுகாதார ஆய்வாளர்கள் கைலாசசுந்தரம், பிச்சையா பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது என்றார் அவர்.