Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கலப்பட டீத்தூள் பறிமுதல்

Print PDF

தினமலர் 25.02.2010

கலப்பட டீத்தூள் பறிமுதல்

சுல்தான்பேட்டை : சுல்தான்பேட்டை வட்டாரத்தில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி ஐந்து கிலோ கலப்பட டீத்தூளை பறிமுதல் செய்து அழித்தனர்.

சுல்தான்பேட்டை வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் அருள்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள் வெள் ளிங்கிரி, ரவிச்சந்திரன், கனகராஜ் தலைமையிலான அலுவலர்கள், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் உள்ள மளிகைக்கடைகள், டீக்கடைகள், பேக்கரி கடைகளில் போலி கலப்பட டீத்தூள் பயன்படுத்தப்படுகிறதா அல்லது விற்பனை செய்யப்படுகிறதா என அதிரடிசோதனை நடத்தினர்.

இதில், ஐந்து கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டது. ஆய்வு செய்த டீத்தூள் மாதிரி கோவை உணவு பொதுபகுப்பாய் வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. கலப்பட டீத் தூள் வைத்து இருந்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க மேலதிகாரிகளுக்கு சுகாதாரத்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.

Last Updated on Thursday, 25 February 2010 07:10