தினமலர் 26.02.2010
வீடு தேடி சென்று ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள் மாநகராட்சியில் புதிய திட்டம் துவக்கம்
புளியந்தோப்பு :சென்னை மாநகராட்சி சார்பில், மக்கள் வசதிக்காக பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில்நாட்டிலேயே முதல் முறையாக, பொதுமக்கள் வீடுகளுக்கே சென்று ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற் கொண்டு ஆய்வு அறிக்கைகளை வழங்கும் முன்மாதிரி திட்டம் துவங்கப் பட்டுள்ளது.
பெரம்பூர், புரசைவாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம், சைதாப் பேட்டை, திருவான்மியூரில் இயங்கும் மாநகராட்சி மருத்துவ சோதனை கூடங்கள் மூலம் இத்திட்டம் குறைந்த கட்டணத்தில் செயல்படுத்தப் படவுள்ளது. இத்திட்டத்தை சென்னை புளியந் தோப்பில் நேற்று துவக்கி வைத்து மேயர் சுப்ரமணியம் பேசியதாவது: வீடு தேடி சென்று பொது மக்களுக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வேலைக்கு செல்பவர்கள், தனியார் லேப்களுக்கு சென்று பரிசோதனைகள் செய்ய, ஒரு நாள் விடுமுறை எடுக்க வேண்டும்.ஆனால், அவர்கள் வீட்டில் இருந்தபடி 1913 என்ற தொலைபேசி எண்ணில் அழைத்தால் மாநகராட்சி லேப் டெக்னீசியன்கள் அவர்கள் வீடுகளுக்கே சென்று பரிசோதனைகளை செய்வர்.ஆய்வறிக்கை முடிந்தவுடன் அதை வீட்டிற்கே எடுத்து வந்து வழங்குவர். ரத்த பரிசோதனை செய்வதற்கு 15 ரூபாயும், சிறுநீர் பரிசோதனை செய்ய 10 ரூபாயும் கட்டணம் செலுத்தினால் போதுமானது.இவ்வாறு மேயர் சுப்பிரமணியம் பேசினார்.விழாவில், துணை மேயர் சத்தியபாமா, மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, மாநகராட்சி சுகாதாரத் துறை துணை கமிஷனர் ஜோதி நிர்மலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர