தினமலர் 26.02.2010
சுகாதாரமற்ற முறையில் பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு பூட்டு : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
திருநெல்வேலி:நெல்லை புதுபஸ்ஸ்டாண்டில் சுகாதாரமற்ற முறையில் பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டு போட்டனர்.நெல்லை புது பஸ்ஸ்டாண்ட்டில் உள்ள சில கடைகளில் சுகாதரமற்ற முறையில் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரனுக்கு புகார் செய்யப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன், செயற்பொறியாளர் நாராயணநாயர், உதவி கமிஷனர் பொறுப்பு கருப்பசாமி, உதவி வருவாய் ஆய்வாளர் சோம.சுந்தரம் ஆகியோர் புது பஸ் ஸ்டாண்டில் உள்ள பல்வேறு கடைகளில் திடீரென ஆய்வு செய்தார். முதல் பிளாட்பாரத்தில் உள்ள இரண்டு கடைகள் சுகாதாரமற்ற முறையில் பொதுமக்களுக்கு பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த இரண்டு கடைகளையும் அடைக்க மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.சுகாதார ஆய்வாளர் சங்கரலிங்கம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அந்த இரண்டு கடைகளும் நேற்று மாலை அடைக்கப்பட்டன.