தினமலர் 01.03.2010
கும்பகோணம் நகராட்சியில் யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கும் பணி தொடக்கம்
கும்பகோணம் : கும்பகோணம் நகராட்சியில் யானைக்கால் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 3 நாள் இலவச மாத்திரை வழங்கும் பணி தொடங்கியது.
இத்திட்டத்தின் கீழ் யானைக்கால் நோய் கண்டறியப்பட்டுள்ள 13 மாவட் டங்களில் டி.இ.சி மற்றும் அல்பெண்டசோல் மாத்திரைகளை இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அந்த வகையில் நேற்று மாத்திரை வழங்கும் முகாம் தொடங் கியது. நகராட்சி தலைவர் தமிழழகன் மாத்திரைகளை வழங்கி தொடங்கி வைத்தார். இதையடுத்து வீடுவீடாக சென்று 45 வார்டுகளிலும் இன்றும், நாளையும் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் பூங்கொடி கூறியதாவது: நகராட்சி மருத்துவ பணியாளர்கள் வீடுவீடாக சென்று இலவச மாத்திரைகள் வழங்கி கொண்டிருக் கின்றனர். 2 முதல் 5 வயது வரையுள்ளவர் அல்பென் டசோல், டி.இ.சி மாத்திரைகளை தலா ஒன்று வீதம் உட்கொள்ள வேண்டும்.
6 முதல் 14 வயது வரையுள்ளவர்கள் அல்பென்டசோல் ஒன்றும், டி.இ.சி இரண் டும் உட்கொள்ள வேண் டும். 15 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் அல்பென்டசோல் ஒன் றும், டி.இ.சி மூன்றும் உட்கொள்ள வேண்டும். இம்மாத்திரைகளை உணவு சாப்பிட்ட பிறகு ஒரே வேளையில் சாப்பிட வேண்டும். உணவு சாப்பிடாமல் மாத்திரைகளை போட்டு கொள்ள கூடாது.
நீண்டநாள் நோயாளிகள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள், மனநிலை சரியில்லாதோர், கர்ப்பிணி மற்றும் பாலூட் டும் தாய்மார்கள், 2 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட் டவர்கள் இம்மாத்திரைகளை உட்கொள்ள கூடாது என்றார்.