தினமலர் 02.03.2010
கலப்பட டீத்தூள் விற்றால் உரிமம் பறிபோகும்
ஆலந்தூர் : ஆலந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கடைகள், உணவு விடுதிகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, ஆலந்தூர் நகர் மன்றத் தலைவர் துரைவேலு வெளியிட்டுள்ள அறிக்கை: ஆலந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் கலப்பட டீத்தூள் விற்பனை செய்யப்படுவதாகவும், டீ கடைகளில் கலப்பட டீத்தூள் பயன் படுத்துவதாகவும் நகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. கலப்பட டீத்தூள் பயன்படுத்துவதால் டீ குடிப்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்களின் நலன் காத்திட கலப்பட டீத்தூள் பற்றிய புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க நக ராட்சி சார்பில் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆலந்தூர் நகராட்சி கமிஷனர் மனோகரன் தலைமையில், பொது சுகாதார அலு வலர் பழனிவேல், சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் நகராட்சிக்கு உட் பட்ட பகுதியில் உள்ள கடைகள், உணவு விடுதிகளில் ஆய்வு செய்து கலப்பட டீத் தூள் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.