தினமணி 02.03.2010
இன்று வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
கரூர், மார்ச் 1: கரூர் நகராட்சி பகுதியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 2) நடைபெறுகிறது.
பசுபதிபாளையம் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு முகாம் தொடங்குகிறது. முகாமில், பொது மருத்துவம், குழந்தைகள் நலம், சர்க்கரை நோய், புற்றுநோய், குடல் நோய், முதியோர் சிகிச்சை, சித்த மருத்துவம், நரம்பியல், காசநோய், இருதய நோய், கண் பரிசோதனை, கர்ப்பப்பை உள்ளிட்ட நோய்களுக்கு அதிநவீன சாதனங்களைக் கொண்டு பரிசோதனை செய்யப்படுகிறது.
இதில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்றுப் பயனடைய வேண்டுமென கரூர் நகராட்சித் தலைவர் பி. சிவகாமசுந்தரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.