தினமலர் 03.03.2010
யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரை வழங்கல்
ஆம்பூர்: ஆம்பூரில் யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரை வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. ஆம்பூர் நகராட்சி பகுதிகளில் யானைக்கால் நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் டி.இ.சி மாத்திரை மற்றும் அல்பண்டோசால் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி துவக்க விழா நடந்தது.விழாவிற்கு நகராட்சி தலைவர் நசீர்அகமது தலைமை தாங்கி துவக்கி வைத்தார். துப்புரவு ஆய்வாளர்கள் நாராயணமூர்த்தி, பாலசந்தர், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூச்சியியல் உதவியாளர் சேகர், களப்பணி உதவியாளர் கோபால் மற்றம் தன்னார்வலர் தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆம்பூரில் உள்ள 36 வார்டுகளில் அனைத்து வீடுகளிலும் உள்ளவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன.