தினமணி 03.03.2010
ஆழ்வார்திருநகரியில் யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரை விநியோகம்
ஸ்ரீவைகுண்டம், மார்ச் 2: ஆழ்வார்திருநகரி பேருராட்சிப் பகுதிகளில் யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டன.
ஆழ்வார்திருநகரி பேரூராட்சிப் பகுதியில் சாக்கடையிலிருந்து வெளியேறும் ஒருவகையான கொசு கடித்து யானைக்கால் நோய் பரவுவதற்கான அறிகுறி 3 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது. இதுவரை 30 பேர் யானைக்கால் நேôயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யானைக்கால் நோயைக் கட்டுப்படுத்த உலக சுகாதாரத் துறை நிறுவனத்துடன் இணைந்து இப் பகுதியில் கடந்த இரண்டாண்டுகளாக மாத்திரை விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப் பணிகள் துறை துணை இயக்குநர் டாக்டர் உமா தலைமையில், ஆழ்வார்திருநகரி பேருராட்சித் தலைவர் ஆதிநாதன் முன்னிலையில் வீடு வீடாகச் சென்று யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டன. இந் நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மதன், டாக்டர் சுனில்குமார், சுகாதார ஆய்வாளர்கள் பால் ஆபிரகாம், மாரியப்பன் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர்.