தினமலர் 05.03.2010
கோவில் குப்பைகள் அகற்றம்
சென்னை : பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவிலில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில் அருகே குப்பைகள் தேங்கி துர் நாற்றம் வீசுவதாக தினமலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, அடையாறு மண்டல மாநகராட்சி அதிகாரி சம்பத் உத்தரவின் பேரில், நீல்மெட்டல் பனால்கா ஊழியர்கள், கோவில் அருகே தேங்கியிருந்த குப்பைகளை நேற்று அகற்றினர். மாநகராட்சி ஊழியர் கள் கோவில் வளாகத்தைச் சுற்றிலும் பிளீச்சிங் பவுடர் தெளித்தனர். குப்பைத் தொட்டியில் குப்பையை போடும்படி அறிவிப்பு பலகை எழுதி வைக்கப்பட்டது.