தினமணி 05.03.2010
தேவர்சோலையில் பழைய மாட்டிறைச்சி விற்பனை
கூடலூர், மார்ச் .4: கூடலூர் அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சியில் உள்ள இறைச்சிக் கடையில் பழைய மாட்டிறைச்சி விற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேவர்சோலை பஜாரில் பழைய மாட்டிறைச்சி விற்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து செயல் அலுவலர் பி.ராஜகோபால்,வட்டார மருத்துவ அலுவலர் கிருஷ்ணராஜ்,சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் ஆகோயோர் சோதனை நடத்தியதில் அங்குள்ள ஓரு மாட்டிறைச்சிக் கடையில் 25 கிலோ பழை மாட்டிறைச்சி இருந்ததை கைப்பற்றி பினாயில் ஊற்றி அழித்தனர்.
தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடை நிரந்தரமாக சீல்வைக்கப் படும் என்று செயல் அலுவலர் பி.ராஜகோபால் தெரிவித்தார்.